Saturday, June 13, 2009
என்னடி மீனாட்சி!...
வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போல் பாவை தெரியுதடி
C'mon clap
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு...
(என்னடி...)
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
உந்தன் சிரிப்பில் ஒளிந்திருக்கும் துளிவிஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
உந்தன் சிரிப்பில் ஒளிந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது ஹேய்
(என்னடி ...)
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவைத் தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போல்
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது ஹேய்...
(என்னடி...)
வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அற்புதமான அழகான துவக்கம் வாழ்த்துக்கள். கோவை ரவி
நன்றி ரவி சார்....
Post a Comment