Wednesday, June 24, 2009

இளைய நிலா!..


இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுதே
விழாக்காணுதே வானமே!..

(இளைய நிலா)

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (வரும் வழியில்...)
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும்போதிலே அறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா...)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (முகிலினங்கள்...)
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன சடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்

(இளைய நிலா...)

No comments: