Friday, June 12, 2009

என் காதலே ...


என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள் சிறகுகள்,
ரெண்டில் என்ன தரப்போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு,
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
(என் காதலே ...)

காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல்லெறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா? இல்லை வீழ்வதா?
உயிர் வாழ்வதா? இல்லைப் போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா?
ஒரு அமுத விஷமென்பதா?
(என் காதலே ...)

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டால்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா? தடுமாற்றமா?
என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா? இல்லை எதிரியா?
என்று தினமும் போராட்டமா?
(என் காதலே ...)

No comments: