Saturday, June 20, 2009

கம்பன் ஏமாந்தான்!..


கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம்
கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் - இளம்
கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ-அவன்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது
கொதிப்பதனால் தானோ

கம்பன் ஏமாந்தான்....

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

(கம்பன்...)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான் - இளம்
கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்....

No comments: