Tuesday, June 30, 2009

மடை திறந்து தாவும் நதியலை!...



ஹ்ம்ம்.... ஹ்ம்ம்ம்ம்...
தலேலலலா தாலேலலலா தலேலலலா தாலேலலலா
தலேலலலா தலாலலால தளலலேலலலாலா
மடை திறந்து... தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்...
நினைத்து பலித்தது........ ஹோய்
நனனன்ன.....நான நனனன்ன..
நனனன்ன.....நான நனனன்ன..

ஹே ஹே...... பபபப்பா....

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது... நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...(2)
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் ... நான்.......

(மடை திறந்து...)

நேற்றென் அரங்கிலே... நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே.. நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம் (2)
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...........

(மடை திறந்து...)

Monday, June 29, 2009

என்னவென்று சொல்வதம்மா!...



என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்லமொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

(என்னவென்று....)

தெம்மாங்குப் பாடிடும்
சின்ன விழி மீன்களோ
பொன் ஊஞ்சல் ஆடிடும்
கன்னி கரும் கூந்தலோ
பொட்டாடும் மேடைப் பார்த்து
வாடிப் போகும் வான்பிறை
முத்தாரம் மீட்டும் மார்பில்
ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப்பூவின் வாசம்
வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க
தாங்காமல் நாணுவாள்
புதுப்பூக் கோலம்தான்
காலில் போடுவாள்

(என்னவென்று...)

ஆஆஅ.....
கண்ணோரம் ஆயிரம்
காதல்கனை வீசுவாள்
முந்தா...னைச் சோலையில்
தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகமாகி
அசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும்
ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று
அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

(என்னவென்று...)

Sunday, June 28, 2009

இதோ இதோ என் பல்லவி!...




இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ...
இவன் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமா
இதோ இதோ என் பல்லவி

என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா... உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே... ருசியல்லவா
அது என்று தீருமோ

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ...
இவள் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமா
இதோ இதோ என் பல்லவி

அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கைத் தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடல் ஆகினேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
நீ கீர்த்தனை... நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா....

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ...
இவள் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமா
இதோ ஹ்ம்ம்ம்
இதோ ஹ்ம்ம்ம்
என் பல்லவி ஹ்ம்ம்ம்ம்ம்ம்

Saturday, June 27, 2009

பாட்டுத் தலைவன்!...


பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத் தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத் தான்
(பாட்டுத் தலைவன்)
சோர்ந்த போது... சேர்ந்த சுருதி...
சொர்க்க லோகம் காட்டுதிங்கே..
உலகமே ஆடும் தன்னாலே..(பாட்டுத் தலைவன்)

காதல் பேசும்...தாழம் பூவே...
ஓவியம் ஆனதே...கைகள் மீது...
கைகள் வர்ணம்...தீட்டும் நேரம்...
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்...
பாடிடும் பூங்குயில்... மார்பிலே ஆடுதே...
காதலே வாழ்கவே...ஆயிரம் காலமே...
நீ... தா...னே... தாலாட்டும் நிலவே

(பாட்டுத் தலைவன்)


பாதி ஜாமம்...பாயும்போதும்
பால்நிலா வானிலே...காதல் பேசும்....
ஊரைத் தூக்கம் ஆளும்போது...
பார்வைகள் பேசுதே...பாவையோடு....
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்...
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நான்...தா...னே ...தாலாட்டும் நிலவு...

(பாட்டுத் தலைவன்)

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத் தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத் தான்

Friday, June 26, 2009

என்ன சத்தம் இந்த நேரம்!...



என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா!..

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா!..

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ!... இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா!..

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்குயில்கள் இளம் காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம் குயிலின் மொழியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா அடடா!..

Thursday, June 25, 2009

காதல் ரோஜாவே!...


காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண் மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல்.. சொல்

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்.

...........காதல் ரோஜாவே..........

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல்..சொல்.

...........காதல் ரோஜாவே............

இதையும் கேளுங்க...


Wednesday, June 24, 2009

இளைய நிலா!..


இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுதே
விழாக்காணுதே வானமே!..

(இளைய நிலா)

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (வரும் வழியில்...)
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும்போதிலே அறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா...)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (முகிலினங்கள்...)
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன சடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்

(இளைய நிலா...)

Tuesday, June 23, 2009

பெண்ணல்ல பெண்ணல்ல!..



பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தனப் பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்துக்கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தனப் பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ
அட பரவாயில்லையே நல்லா பாடுறியே!...

DELETED PORTION:

சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித் துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்லப் பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்லத் திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்டப் பிறந்த மோகனம்


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ

Monday, June 22, 2009

மேரே ஜீவன் சாதி!..



Singers: Anuradha & S.P.Balasubramaniyam

spb: mere jivan saathi, pyaar kiye ja
anu: vaah! vaah!
spb: haan haan ! mere jivan saathi, pyaar kiye ja
javaani divaani
anu: o o!
spb: khuubasurat, ziddi, padosan
satyam shivam sundaram, satyam shivam sundaram
satyam shivam sundaram
anu: jhutha kahin ka!
spb: jhutha kahin ka? haan, hare raama hare krishhna
anu: dhat! chaar sau bees, aavaara!
spb: dil hi to hai
anu: hai!
spb: aashiq hun bahaaron kaa, tere mere sapane, tere ghar ke samane,
aamane saamane, shaadi ke baad!
anu: shaadi ke baad? o baap re!
spb: haan haan haan, haan! hamaare tumhaare!
anu: kya?
spb: munna, guddi, tinku, mili, shin shinaaki bubala bu,
khel khel men, shor! shor, shor....
anu: bhul gaye?
spb: jaahni mera naam
anu: achchha?
spb: chori mera kaam, jaahni meraa naam, o, chori mera kaam
anu: o!
spb: raam aur shyaam
anu: dhat, bandal-baaz!
spb: ladaki, milan, geet gaata chal
anu: besharam!
spb: aaha haa haa haa haa! pyaar ka mausam
anu: besharam...
spb: satyam shivam sundaram, satyam shivam sundaram
satyam shivam sundaram
mere jivan saathi, pyaar kiye ja
anu: jaa jaa!
spb: javaani divaani
khuubasurat, ziddi, padosan, satyam shivam sundaram
ishq ishq ishq!
anu: "Naughty boy."
spb: haa haa! ishq ishq ishq
anu: Bluff master.
spb: ye raaste hain pyaar ke, chalate chalate, mere hamasafar
anu: aah!
spb: hamasafar, dil tera divaana, divaana mastaana,
chhaliyaa, anjaana
anu: pagalaa kahin kaa
spb: chhaliyaa, anjaana, aashiq begaana, lofar, anaadi
badhati ka naam daadhi, chalati kaa naam gaadi - (2)
jab pyaar kisi se hota hai, ye sanam
anu: o ho!
spb: jab yaad kisi ki aati hai, janeman
anu: sach?
spb: bandan, kangan, chandan, jhula, chandan, kangan, bandan, jhula, bandan
jhula, kangan jhula, chandan jhula, jhula jhula jhula jhula
dil diya dard liya, jhanak jhanak paayal baaje,
chham chhama chham
geet gaaya pattharon ne, saragam, satyam shivam sundaram
satyam shivam sundaram, satyam shivam sundaram
spb: mere jivan saathi, pyaar kiye ja
anu: chal chal!
spb: javaani divaani, khuubasurat, ziddi, padosan
satyam shivam sundaram, satyam shivam sundaram
" Sing with me come on!"
anu, sbp: laa laa laa laa laa laa
spb: " come on! good! "
anu, sbp: laa laa laa laa laa laa

Sunday, June 21, 2009

இளமையெனும் பூங்காற்று!..


இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமையெனும் பூங்காற்று

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தால் கேள்வி எழுமுன் விழுந்தால்
எந்த உடலோ எந்த உறவோ

இளமையெனும் பூங்காற்று

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் களைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

Saturday, June 20, 2009

கம்பன் ஏமாந்தான்!..


கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம்
கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் - இளம்
கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ-அவன்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது
கொதிப்பதனால் தானோ

கம்பன் ஏமாந்தான்....

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

(கம்பன்...)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான் - இளம்
கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்....

Thursday, June 18, 2009

ஒரு காதல் தேவதை



ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

(ஒரு காதல்......காலை வேளையில்)
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது!...

(ஒரு காதல்......காலை வேளையில்)
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது!...

(ஒரு காதல்......காலை வேளையில்)
லல லால லால லா லாலல லாலா
லல லால லால லா லாலல லாலா

Wednesday, June 17, 2009

ஒ மாரியா!...


O Maariyaa, O Maariyaa, O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa, O Maariyaa Ho Ho Ho Ho

O Maariyaa, O Maariyaa, O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa, O Maariyaa Ho Ho Ho Ho
Arrey Jaani Jab Bola Tha Tujhse Shaadi Karegi Mujhse
Kaise Kahaa Thaa Ye Bataa Ha a a....

O Maariyaa, O Maariyaa, O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa, O Maariyaa Ho Ho Ho Ho
Arrey Jaani Jab Bola Tha Tujhse Shaadi Karegi Mujhse
Kaise Kahaa Thaa Ye Bataa

O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O

Hey Hey... Hey Hey Hey...
Ho Ho... Ho Ho Ho...

Shoola sa tan maan mein
Ek bhadka to hoga
Jani ki baaton se
Dil Dhadka to hoga
Sun ke woh baatein
Kya tu chup holi thi
Mummy se poochungi
Kya aisa boli thi
Hooo

O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O
Arrey Jaani Jab Bola Tha Tujhse Shaadi Karegi Mujhse
Kaise Kahaa Thaa Ye Bataa
O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O

Janii ne jab tujhse ki thi aisi baatein
Garmi Ke woh Din The Ya Sardi Ki Raatein
Kya woh yeh bola kuch aisa ho jaye
Hum tum ho kamre mein
Aur Chabi kho jayeee


O Maariyaa, Ha.. O Maariyaa Ha.. O Maariyaa O Ho O
O Maariyaa, Ha.. O Maariyaa O Ha..O Maariyaa Haaa...
Arrey Jaani Jab Bola Tha Tujhse Shaadi Karegi Mujhse
Kaise Kahaa Thaa Ye Bataa
O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O
O Maariyaa, O Maariyaa O Maariyaa O Ho O


Khoi Huee Thi Jab Tu Jaani Ki Baaton Mein
Thama Hath Bhi Tha Kya, Apane Haathon Mein
Jab HaaN Boli Tu, Kyaa Vo Paas Aayaa Thaa, HaaN
O My Darling Kah Ke Kyaa Gale Lagaayaa Thaa Haa Haa Haa Haa Haa
O Maaria Ho O Maaria Ho
O Maaria, Ho Ho Ho Ho Ho Ho
O Maaria Ho O Maaria Ho
O Maaria Ho Ho Ho Ho
Arrey Johny Jab Bolaa Thaa Tujhse Haay
Shaadi Karegi Mujhse Haay
Kaise Kahaa Thaa Ye Bataa Aa Aa Aa
O Maaria, O Maaria, O Maaria Ho Ho Ho
Hey Maaria....
Haa ...Maaria...

Tuesday, June 16, 2009

கண்ணால் பேசும் பெண்ணே


கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா?
கவிதை தமிழில் கேட்டேன் என்னை மன்னிப்பாயா?
சலவை செய்த நிலவே என்னை மன்னிப்பாயா?
சிறு தவறை தவறி செய்தேன் என்னை மன்னிப்பாயா?

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி..
உனது கோவங்களும் ஏனடி?
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி..
எனது சாபங்களை தீரடி

கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன் என்னை மன்னிப்பாயா?

நிலா.. பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே! ஹா...
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில எங்கும் பிழையில்லையே.

பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது.. சப்தம் கேட்கமாட்டேன்..
மூன்றாம் பிரையினுள்ளே.. நிலவை தேட மாட்டேன்..

வாழ்வு துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

(கண்ணால் பேசும்...)

எங்கே குறுநகை எங்கே?... குறும்புகள் எங்கே? கூறடி.. ஹோ...
கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி

செல்லக்கொஞ்சல் வேண்டாம் சின்ன சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்... பாதி சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்

வாழ்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன் என்னை மன்னிப்பாயா?
சலவை செய்த நிலவே என்னை மன்னிப்பாயா?
சிறு தவறை தவறி செய்தேன் என்னை மன்னிப்பாயா?

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி..
உனது கோவங்களும் ஏனடி?
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி..
எனது சாபங்களை தீரடி

Monday, June 15, 2009

எஸ்.பி.பி. சாரிட்டி பவுண்டேஷன் விழா

பாடல்கள் கேட்பது மட்டும் நமது பணி அல்ல இதோ பாலுஜியின் ஆத்மார்த்தமான அன்பை பெற்ற அவரின் அனபு உள்ளங்கள் அவரால் இயன்ற அளவு பொருளுதவியுடன் கடந்த 4 வருடங்களாக நடைப்பெற்று வரும் பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் அனாதை இல்லங்கள் ஆதரவற்ற முதியோர் இல்லங்களூக்கு வருடத்திற்க்கு ஓரிருமுறை சென்று அவர்களூக்கு தேவையான பொருட்கள் வழங்கி வருவது வாடிக்கை. அதுமட்டுமல்லாமல் டாக்டர் பாலுஜி அவர்களும் கலந்து கொண்டு அவர் கையால் வழங்குவது மிகவும் சிறப்பான அம்சம். அதேபோல், இதோ இந்த மாதம் அவரின் பிறந்தநாள் 3 நாள் கழித்து 7ஆம் தேதி ஒரு ஞாயிறு அன்று சென்னையில் பூந்தமல்லியில் உள்ள, காந்திஜி மறுவாழ்வு மையத்தில் சிறுவர்களின் படிப்பிற்க்கு தேவையான பொருட்கள் வழங்கும் நற்பணி விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அவரது ரசிகர்களையும் அந்த மையத்தின் சிறுவர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஆமாம் இசையன்பர்களே டாக்டர் பாலுஜி அவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இது ஒரு நீங்காத ஞாபகம் தான் நம் நெஞ்சிலே நீங்களும் கீழே புகைப்பட கண்காட்சியை கண்டு மகிழுங்கள்.



நன்றி கோவை ரவீ சார்

சங்கீத ஜாதிமுல்லை (காதல் ஓவியம்)



ஆ.........
நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா ஆஆஆஆஆஆஅ...

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா ஆஆஆஆஆஆஅ...

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ...
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திசெல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே...

(ஸ்வரங்கள்) .........

Sunday, June 14, 2009

காதலில் பிரிவுதான் நிரந்தர சுகமானது.
காதலில் இணைவது என்பது தற்காலிக சுகம்,
பிரிவது என்பது நிரந்தரமான துயரம்
துயரத்தின் மறுப்பக்கம் நினைவுகளின் சுகம்
இந்த வலியை பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா.
இந்த பாடலுக்கு உயிர் தந்திருக்கிறார் பாருங்கள் எஸ்.பி.பி.

Saturday, June 13, 2009

என்னடி மீனாட்சி!...


வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போல் பாவை தெரியுதடி
C'mon clap

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு...
(என்னடி...)

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
உந்தன் சிரிப்பில் ஒளிந்திருக்கும் துளிவிஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
உந்தன் சிரிப்பில் ஒளிந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது ஹேய்
(என்னடி ...)

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவைத் தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போல்
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது ஹேய்...
(என்னடி...)
வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி

Friday, June 12, 2009

என் காதலே ...


என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள் சிறகுகள்,
ரெண்டில் என்ன தரப்போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு,
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
(என் காதலே ...)

காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல்லெறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா? இல்லை வீழ்வதா?
உயிர் வாழ்வதா? இல்லைப் போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா?
ஒரு அமுத விஷமென்பதா?
(என் காதலே ...)

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டால்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா? தடுமாற்றமா?
என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா? இல்லை எதிரியா?
என்று தினமும் போராட்டமா?
(என் காதலே ...)

Thursday, June 11, 2009

எதிலேயும் வல்லவர்



புது மெட்டைப் போட்டுக்கடா
இளமொட்டைப் பாத்துக்கடா
நம்மோட பாட்டுக்கு இங்கு போட்டி உண்டாடா!

பல மொழியும் கற்றவர்
பாட்டில் இவர் வல்லவர்
இவராட்டும் பாட இங்கு யாரு சொல்லுங்க!

இசை(எஸ்.பி.பி)க்கு இனம், மொழி என்பது தடை இல்லை

Wednesday, June 10, 2009

மண்ணில் இந்த காதலின்றி



மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ....
நாம் காதலிப்போம் நம் பாடும் நிலாவை

Tuesday, June 9, 2009




இசை சாகரம் டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் காதலர்களாகிய நாம் இங்கே சங்கமிப்போம்....