Tuesday, August 4, 2009

நண்பனே எனது உயிர் நண்பனே!..


படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
நடிப்பு: கமலஹாசன், சரத்பாபு, மாதவி.





123 ஏ...... ஹே.... ஏ ஹே ஹே ...........
ஏ ஹே ஹே ஏ ஹே ஹே ஹே.....ஆஆஆ!......
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது! ஹா!..
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை இன்றும் என்றும்
கேட்க வேண்டும் எனது ஆசை! ஹே!...ஹே!

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடிச் செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே!..
நமக்கு ஏது பிரித்து பார்க்க
இரண்டு மனமே! ஹே!....ஹே!

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!
லாலலா லாலலா லாலலா!
லாலலா லாலலா லாலலா!...

<<<நாலு நிமிஷம் தாங்க பாட்டு!...
அதுக்கு அப்புறம் படத்தில இருந்து ஒரு காட்சி...>>>

3 comments:

Anonymous said...

great mohan kumar

Mohan kumar said...

Ayyo!.. Ellaam unga suggestion thana sir........

Unknown said...
This comment has been removed by the author.