Saturday, August 29, 2009

கடவுள் அமைத்து வைத்த மேடை!..


படம்:- அவள் ஒரு தொடர்கதை
பாடியவர்கள்:- எஸ்.பி.ப., சாய்பாபா
இசை:- எம்.எஸ்.வி.
நடிப்பு: கமல், சுஜாதா, விஜயகுமார்

Get this widget | Track details | eSnips Social DNA


கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
ஹெஹெஹே ஆஹாஆ ம்ம்ம்ம் லாலாலா
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

(கடவுள் அமைத்து...)


நானொரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே
அந்த அற்புத வனத்தினிலே
ஆண் கிளி இரண்டுண்டு
பெண் கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதில் ஒரு பெண் கிளி
அதனிடம் ஆண் கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே! ஆருயிரே! என் அத்தானே!

(கடவுள் அமைத்து....)

கொட்டும் முழக்கங்கள்
கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
கொட்டும் முழக்கங்கள்
கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில்
சீர் கொண்டு வந்ததமா
தேன் மொழி மங்கையர்
யாழ் இசை மீட்டிட
ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு சங்கீத தத்தைகள்
சங்கீதம் பாடுதம்மா

(கடவுள் அமைத்து....)

கன்றோடு பசு வந்து
கல்யாண பெண் பார்த்து
வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வெ
ன்டு பிள்ளைகள்
போல் வந்த முயல்கள்
ஆங்கிலம் பாடுதம்மா
wish u well happy life
happy happy married life
பண்பான வேதத்தை
கொண்டாடும் மான்கள்
மந்திரம்
துதம்மா
பண்பான வேதத்தை
கொண்டாடும் மான்கள்
மந்திரம்
துதம்மா
பல்லக்கு தூக்கிடும்
பரிவட்ட யானைகள்
பல்லாண்டு பாடுதம்மா

(கடவுள் அமைத்து....)


ஒரு கிளி கையோடு
ஒரு கிளி கை சேர்த்து
உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்கையை
உறவுக்கு கொடுத்திட்ட
ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண்கிளி
தப்பாக நினைத்து
அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல
கிணற்று தவளை தான்
இபோது தெரிந்ததம்மா

(கடவுள் அமைத்து....)

No comments: