Thursday, August 6, 2009

குருவாயூரப்பா! குருவாயூரப்பா!...


பாடல்: குருவாயூரப்பா
படம்: புது புது அர்த்தங்கள்
வருடம்: 1989
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & சித்ரா
இசை: இளையராஜா
நடிப்பு: ரகுமான், கீதா
இயக்கம்: கே. பாலச்சந்தர்




குருவாயூரப்பா! குருவாயூரப்பா!
குருவாயூரப்பா! குருவாயூரப்பா!
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா! குருவாயூரப்பா!
வேண்டாத தெய்வமில்லை நீ தானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை (2)

(குருவாயூரப்பா! குருவாயூரப்பா!..)

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நாடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன்தான்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே

(குருவாயூரப்பா! குருவாயூரப்பா!..)

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உன்னை யார் தடுக்க

பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

(குருவாயூரப்பா! குருவாயூரப்பா!..)

1 comment:

Anonymous said...

Lovely melody song thx for posting mohan kumar. All the best.