Monday, July 13, 2009

அந்தி மழை பொழிகிறது!...



அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை...)

ஆஆஆஆஆஆஅ........
தேனில் வண்டு மூழ்கும் போது ஆஆஆஆ....
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

(அந்தி மழை...)

தேகம் யாவும் தீயின் தாகம் ஆஆஆஆஆ....
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....

1 comment:

Anonymous said...

//நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய் ..//

கலக்கல் வரிகள். பகிர்விற்க்கு நன்றி.